Thursday, November 27, 2008

சிவம்

பரனே உந்தன் சிவ நாமம்
தொழுதே நாழும் உயிர் வாழும்
எந்தன் வாழ்வு உன் அடி சேர

கைலாச வாச உன்
உறை இடம் நாடி
ஊன் மறந்து
உறக்கம் துறந்து
உடல் மறைக்க
உலர் துணி ஒன்று கொண்டு
பயனம் பொழுதில்
தேவை என்றால்
பசியும் என்றால்
கையேந்தி பிச்சை வாங்கி
வினை தீர பாடு பட்டு
உன் திருவடியினை
தொழ வருவேன்

காலத்தில் கலியும் சுற்றும்
அத்தோடு மனிதன் வாழ்வு முற்றும்
பாவத்தில் பரனே உந்தன்
காளத்தி லிங்க ரூபம் கண்டேன்
தில்லைநாதா உன் திருநடனம்
ருத்ரனே உந்தன் ஆனந்த தாண்டவம்
கண்ணில் கான முன் ஜென்மம்
தேவன் ஆனேனோ
இல்லை உன்னை நினைத்து
தனியே தவம் புரிந்த முனிவனும் நானோ
வந்த என்னை அனைத்துவிடு
வழியை எனக்கு மறைத்து விடு
உன் பாதம் சரணம்
சிவ சிவ பரனே
அருணாச்சலனே
கையிலை ஆளும் காளத்தீ ஈசா..